மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “ஆ”கார வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணி “ஆ”கார வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 மே, 2021

ஆனைக்கால் நோய் (Elephantiasis)

 

 

01.  கருங்கொள்ளு, காந்தக்கல், காவிக்கல், புற்றுமண், முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து அரைத்து, வீக்கம், கட்டி, யானைக்கால் நோய்க்குப் பற்றுப் போடலாம்.(Asan)

 

02.  காக்கரட்டான் விதை 10 பங்கு, இந்துப்பு 10 பங்கு சுக்குத்தூள் 2 பங்கு  எடுத்து பொடித்து ஒரு தேக்கரண்டி கொடுத்துவர யானைக்கால் நோய் குணமாகும்.

 

03.  காக்கிரட்டை ( சங்குப்பூ ) விதைத் தூள் 50 கிராம், இந்துப்பு 50 கிராம், சுக்குத் தூள் 25 கிராம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு வேளைக்கு மூன்று கிராம் வீதம் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆனைக் கால் நோய் குணமாகும். (1048)

 

04.  சத்திச் சாரணை வேர்ப் பொடி அரை கிராம் சாப்பிட்டு வந்தால் யானைக் கால் வீக்கம், வாதநோய் குணமாகும்(1720)

 

05.  தழுதாழை இலையை ஆலிவ் விதை எண்ணெயில் வதக்கிக்கட்ட யானைக்கால் வீக்கம், விரை வாதம், வாத வீக்கம், நெறிக் கட்டிகள் தீரும் (1101)

 

06.  பசுவின் சிறுநீரும், மஞ்சள் தூளும், வெல்லமும் கலந்து  தினசரி ஒரு வேளை மட்டும் 30 மி.லி. அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் ஆனைக்கால் நோயிலிருந்து விடுபடலாம்.(1049)

 

07.  பப்பாளி இலையை அரைத்து யானைக் காய் நோய்க்குப் பற்றுப் போட்டு வந்தால், புண்கள் ஆறும். மிகுந்த பயன் உண்டு.  (1046) (1773)

 

08.     வல்லாரை இலைப் பொடி காலை மாலை நெய்யில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் குணமாகும்.  (1578)

 

09.     வல்லாரைக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வந்தால் யானைக் கால் வீக்கம் குணமாகும்..  (1607)

 

10.     வல்லாரைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் குணமாகும்.  (1047) (1268)  (1880)



 

 ==========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !

(02.  ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )15]

{29-05-2021}

===========================================================


 



ஆண்மைக் குறைவு (Impotency)

 

01.  அத்திப் பழத்தை அப்படியே காலை மாலை சாப்பிட்டு பால் அருந்தலாம். பதப்படுத்திஐந்து நாட்கள் நிழலில் காய வைத்துதேனில் போட்டுச் சாப்பிடலாம். உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10 – 15 கிராம் எடுத்து பாலில் கலந்து அருந்தலாம். தாது விருத்திக்குச் சிறந்தது ஆகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடு அகலும்.

 

02.  அத்திப் பழத்தை முறையாக தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.(485)

 

03.  அமுக்கராக் கிழங்குப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நிவர்த்தியாகும். (502)

 

04.  அரச மரத்தின் பட்டை, வேர், பழம், இலை ஆகியவற்றை எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து காய்ச்சிய பாலுடன் ஒரு தேக்கரண்டி அளவுக்கு இத் தூளைச்  சேர்த்து அருந்தி வந்தால் ஆண்மை பலம் பெருகும்.(499)

 

05.  அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்துப்பொடியாக்கி 1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நோய் குணமாகும். நீரிழிவு நோய் தீரும். ஆண்மை பெருகும்.

 

06.  தொட்டாற் சுருங்கி  இலையை அரைத்து, 15 கிராம் எடுத்து பாலில் கலந்து இரவு சாப்பிட ஆண்மை பெருகும்.

 

07.  ஆமணக்கு எண்ணெயுடன் கஞ்சாங் கோரை இலைப் பொடியைச் சேர்த்துக் கலந்து  இதை சுடு பாலில் இட்டு ஆற்றி அருந்தி வந்தால் ஆண்மை பெருகும். (500)

 

08.  ஆம்பல் (அல்லி)  கிழங்கை காய வைத்து இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி ஒரு தேக்கரண்டி தூள் எடுத்து பசும் பாலில் சாப்பிட்டு வந்தால்  ஆண் உறுப்பு உறுதிப்படும்.(510)

 

09.  உளுத்தம் பருப்பை சர்க்கரை கலந்த பசும் பாலில் ஊற வைத்து, நன்கு ஊறிய பின்பு எடுத்து உலர்த்தி, மாவாக்கி,அந்த மாவுடன் வெண்ணெய் சேர்த்து கேக் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.(508)

 

10.  எள்ளுப் பூவைப் பசும்பாலில் போட்டுக் காய்ச்சி நாள்தோறும் அருந்தி வந்தால் ஆண்மை பெருகும்.(519)

 

11.  ஓரிதழ் தாமரை இலைகளை அரைக் கைப்பிடி எடுத்து  விடிவதற்கு முன்அதை மென்று தின்று பால் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு சரியாகும்.(471)

 

12.  கஞ்சாங் கோரை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி, பொடி செய்து, இந்தப் பொடியில் அரைத் தேக்கரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் கலந்து பருகி வந்தால் ஆண்மை பெருகும்.(500)

 

13.  கருஞ்சீரக எண்ணெயை ஆண்குறியில் தடவி வந்தால், ஆண்குறி பருமனாகும்.(1887)

 

14.  கருஞ்சீரக எண்ணெயை வெற்றிலையில் தடவி மென்று தின்று வந்தால் ஆண்மை பெருகும்.(515)

 

15.  கோரைக் கிழங்கின் பொடி 1 கிராம் அளவுக்கு எடுத்து தேனில் குழைத்து தினசரி 2  வேளைகள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை விருத்தியாகும்.

 

16.  சர்க்கரை வள்ளிக் கிழங்கைக் காய வைத்து இடித்து தூளாக்கி, பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண் உறுப்பு உறுதிப்படும்.(511)

 

17.  செண்பகப் பூவை  நிழலில்  உலர்த்திப்  பொடியாக்கி கஷாயம்  செய்து காலை,  மாலை  இரு வேளையும் அருந்தி  வந்தால் ஆண்மைக்  குறைவு  நீங்கும். [ ஆண்மைக்  குறைவு  என்பது  பல  காரணங்களால் உண்டாகிறது. ]

 

18.  செம்பருத்திப் பூவை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு இரவில் ஒரு சிட்டிகை தூளை வாயில் போட்டுக் கொண்டு  பசும்பால் பருகி வந்தால் தாம்பத்திய நேரம் நீடிக்கும்.(971)

 

19.  சோற்றுக் கற்றாழை வேரை அலசிப் பால் ஆவியில் அவித்து, உலர்த்திப் பொடி செய்து ஒரு மேசைக் கரண்டி (15 மி.லி.) பாலுடன் கொடுக்கச் சூட்டு நோய்கள் தீரும். ஆண்மை நீடிக்கும்.

 

20.  தர்பூசணி விதைப் பொடியை 2 கிராம் அளவு பாலுடன் கலந்து தினமும் அருந்தி வந்தால், ஆண்மை பெருகும்.

 

21.  தவசிக் கீரை, முருங்கைக் கீரை ஆகியவ்ற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், ஆண்மை பெருகும். (489) (1894)s

 

22.  தாழை விழுது ஆண்மையையும், குருதிப் பெருக்கையும் உண்டாக்கும்.

 

23.  திப்பிலிப் பொடி கால் தேக்கரண்டி எடுத்து நெய்யில் கலந்து உண்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். (516) (1952)

 

24.  திருநீற்றுப் பச்சிலை விதைகளை ஊற வைத்து சர்பத்தில் போட்டு அருந்தும் பழக்கம் உள்ளது. இவை சிறந்த மணமூட்டியாகச் செயல்படுகிறது. இது ஆண்மையைப் பெருக்கும்.

 

25.  துத்திப்  பூவை உலர்த்திப் பொடித்து, பாலும் கற்கண்டும் சேர்த்துச் சாப்பிட்டு வர, குருதி வாந்தி, அழல் நீங்கும். தேகக் குளிர்ச்சி உண்டாகும். ஆண்மை பெருகும்.

 

26.  தூதுவேளைப் பூவை உலர்த்தி பொடி செய்து அரைத் தேக்கரண்டி பாலுடன் சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

 

27.  நாயுருவி விதை, நீர்முள்ளி விதை, வெங்காய வீதை, முருங்கை விதை, இவைகளை முருங்கைப் பிசினுடன் நீரில் கரைத்து அரைத்து சிறு உருண்டைகள் ஆக்கி, தினசரி ஒரு உருண்டை பசும் பாலில் கலந்து அருந்தி வந்தால் உறவில் சக்தி மிகும். விந்து கெட்டிப் படும். (468)

 

28.  நிலப் பனைக்கிழங்கு, சீந்தில் சர்க்கரை, பூனைக்காலி, நெருஞ்சில், இலவம் பிசின், நெல்லி வற்றல், ஓர் எடையாய் எடுத்துக் கலந்து வேளைக்குக் கால் பலம் வீதம் பாலுடன் உட்கொள்ள ஆண்மை பெருகும்.

 

29.  நிலப்பனைக் கிழங்கின் மேல் தோலையும் உள் நரம்பையும் போக்கி, உலர்த்திப் பொடித்து 5 கிராம் பொடியுடன் சர்க்கரை கூட்டிப் பாலுடன் கலந்து, காலை மாலை உட்கொள்ள ஆண்மை உண்டாகும்.

 

30.  நெருஞ்சில் வித்தினைப் பாலில் அவித்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை 1-1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து கொடுத்து வர,ஆண்மை பெருகும்..

 

31.  பாதாம் பருப்பை வறுத்து அடிக்கடி உண்டு வந்தால் கண் பர்வை தெளிவடையும்; ஆண்மைப் பெருக்கம் உண்டாகும்.  (766)

 

32.  மகிழம் பூவை நீர் விட்டுக் காய்ச்சி, அந்த நீரை ஒரு தம்ளர் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மை, வீரிய உணர்வு உண்டாகும்.  (514)  

 

33.  மாதுளம் பழச் சாறு ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு செயலிழப்பை குணப்படுத்த மிகவும் உதவும்.

 

34.  மாதுளம் பழத்தை தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.   (491) (1899)

 

35.  முருங்கை இலைப் பொறியலை நெய்யுடன் சாப்பாட்டுக்குத் தொடக்கத்தில் 40 நாள்கள் சாப்பிட வாலிப மிடுக்கும் வீரியமும் உண்டாகும்.

 

36.  முருங்கை கீரை, தவசிக் கீரை ஆகியவை சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.  (489) (1894)

 

37.  முருங்கைக் கீரையை நெய் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வாலிபமும் வீரியமும் உண்டாகும்.

 

38.  முருங்கைப் பூக்களை பாலில் இட்டுக் காய்ச்சி இரவில் சாப்பிட்டு வந்தால்  ஆண்மை பெருகும்.   (517)  (1591) (2020)

 

39.  முருங்கைப் பூவிலிருந்து பிஞ்சு தோன்றியவுடன் எடுத்து சமைத்து தோலுடன் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணியும்; ஆண்மை அதிகரிக்கும்.

 

40.  வாழைப்பூ வெள்ளை, வெறி, உடல் கொதிப்பு, சீதபேதி, ஆசன வாய்க் கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல் ஆகியவற்றைத் தீர்க்கும். ஆண்மை தரும்.


 

 ===============================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !

(02.  ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )15]

{29-05-2021} 

===========================================================