01. கல்யாண
முருங்கை இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி, வீக்கம் கரையும்.
02. கொடிவேலி வேர்ப் பட்டையை எடுத்து வந்து சற்று நீர் விட்டு அரைத்து ஒரு கோலிக் குண்டு அளவுக்கு எடுத்து பாலில் கரைத்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தலைப் பிடிப்பு நீங்கும்.(1551) பழைய சுரம் குணமாகும் (1665) அரையாப்புக் கட்டி குணமாகும் (1670) கருப்பை நோய்கள் தீரும் (1743)
03. தென்னம் பூவை வாயில் இட்டு மென்று தின்று வந்தால், அரையாப்புக் கட்டி குணமாகும்.(1382)
04. நத்தைச் சூரி வேரை அரைத்து எலுமிச்சை அளவு 30 மி.லி நல்லெண்ணெயில் கலந்து காலையில் மட்டும் ஐந்து நாள் கொடுத்து வர அரையாப்புக் கட்டி கரையும்.
05. மாவிலங்கப் பட்டைக் கசாயம் காலை மாலை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் தீரும். (1567) அரையாப்புக் கட்டி கரையும். (1582)
06. வல்லாரை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டி வர அரையாப்புக் கட்டி குணமாகும். (1025)
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக்
குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !
(02.
) அடைப்புக்
குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
=========================================================================
=====================================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )14]
{28-05-2021}
=====================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக