01)
ஆடு தீண்டாப் பாளை வேர், நூறு கிராம் பொடித்து, ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டு வேளை எட்டுநாள் உண்ண, வண்டுகடி விடம் நீங்கும்.
02) கொன்றை மர வேர்ப் பட்டை வண்டு கடிக்கு சிறந்த மருந்து.
03) பூண்டுப் பற்கள் ஓரிரண்டு எடுத்து நசுக்கி கடிவாயில் அழுத்தித் தேய்த்து, அதையே கடிவாயிலும் கட்டினால் வண்டு கடி, பூச்சிச் கடி ஆகியவற்றால் தொந்தரவு இராது. (886)
(1794)
04) மாவிலங்க மரத்தின் வேர்ப்பட்டை கொட்டைப்பாக்களவு அரைத்துக் கொடுத்து வரப் வண்டு கடி நஞ்சு நீங்கும்
05) மாவிலங்க வேரை எடுத்து அதன் பட்டையை உரித்து அரைத்து அதிலிருந்து ஒரு கிராம் எடுத்து உள்ளுக்குக் கொடுத்தால் பாம்பு கடி நஞ்சு, வண்டு கடி நஞ்சு நீங்கும். (1563)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )17]
{31-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக