01. குப்பைமேனி வேர் கால் பிடி, நாயுருவி வேர் கால் பிடி எடுத்து, நன்றாகத் தண்ணீரில் கழுவி வாயில் போட்டு மென்று சாறினை விழுங்க வேண்டும். நட்டுவாக்காலி விஷம் விரைவாக இறங்கும்.[ ஆதாரம் “ நாட்டு மருத்துவமணி நாகம்மா “ நூல் பக்கம் 41 & 42) ]
02. தேங்காயை மென்று தின்ன இயலாதவர்களுக்கு தேங்காயை இடித்து பால் எடுத்து இரண்டு பாலாடை அளவுக்கு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். கொட்டிய இடத்தில் எருக்கம் பால் வைக்கலாம். அல்லது தீக்குச்சி முனையில் உள்ள கந்தகத்தை எடுத்து குழைத்து நட்டுவாக்காலி கொட்டிய இடத்தில் வைக்க வேண்டும். விஷம் இறங்கும்.[
ஆதாரம் “ நாட்டு மருத்துவமணி நாகம்மா “ நூல் பக்கம் 41 & 42) ]
03. தேங்காய் அரை மூடி (முற்றியது) எடுத்து வாயில் இட்டு நன்றாக மென்று தின்ன வேண்டும். கொட்டிய இட்ததில் எருக்கம் பாலை வைக்க வேண்டும். நட்டுவாக்காலி விஷம் இறங்கிவிடும். [ஆதாரம் “ நாட்டு மருத்துவமணி நாகம்மா “ நூல் பக்கம் 41 & 42) ]
04. தேங்காய்த் துண்டு ஒன்று எடுத்து மென்று தின்றால் நட்டுவாக்காளி விஷம் முறிந்து விடும்.
(897)
05. நட்டுவாக்காளி கொட்டி விட்டால் , கொட்டிய இடத்தில் எரிச்சல் மிகுந்து இருக்கும். நெருப்பு சுட்டதைப் போன்று வலி இருக்கும். கப கபவென்று எரியும். இது தான் நட்டுவாக்காளி கொட்டுக்கு அறிகுறி. (ஆதாரம்: “ நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல், பக்கம் 42)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக