01.
ஊமத்தை இலைகள்
ஒரு கைப்பிடி எடுத்து. கொட்டைப் பாக்கு
அளவு சுண்ணாம்பைச் சேர்த்து மைய அரைக்க வேண்டும். இந்தக் கலவையை நாய் கடித்த இடத்தைச் சுற்றிப் பற்றுப்போட வேண்டும். அடுத்ததாக, நாயுருவி வேர்
ஒரு கைப்பிடி அளவு எடுத்து,சுத்தம் செய்து, தண்ணீர் விடாமல் அரைத்து ஒரு கொட்டைப் பாக்கு அளவு
உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். காலை மாலை இரு
வேளையாக 7 நாள்கள் இவ்வாறு செய்ய வேண்டும். கடிவாயில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெறி நாய்க் கடிக்கும் இதே மருந்து போதுமானது. (ஆதாரம் : “நாட்டு மருத்துவ
மணி நாகம்மா “ நூல்)
02.
ஊமத்தை இலையை நீர் விடாது
அரைத்து, நல்லெண்ணெயில் வதக்கி நாய் கடிப் புண்ணில் கட்ட
ஆறும். மூன்று துளிகள் சாறு எடுத்து வெல்லம் கலந்து
காலை, மாலை 3 நாள் மட்டும்கொடுக்க நஞ்சு தீரும். கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும் இரவில்
பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.
03.
ஊமத்தைவேர் 10 கிராம் எடுத்து ஊமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாய் கடித்த உடனே கொடுக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாள் கொடுக்கவும் .
04.
எருக்கம் பால்
இரண்டு சொட்டுகள் எடுத்து நாய் கடித்தவுடன் கடிவாயில் விட்டால், நாய்க்கடி விஷம் உடலில் ஏறாது. (884) (901)
05.
சிறியாநங்கை இலை 5 அல்லது 10 எடுத்து நாய் கடித்தவுடன் மென்று தின்னவும். விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விடம் நீங்கும் .
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக