01. துத்தி இலையை
நன்றாக அரைத்து மேலே கனமாகப் பூச அதன்மேல் துணியைச் சுற்றி அசையாமல் வைத்திருந்தால்
வெகு விரைவில் முறிந்த எலும்பு கூடி குணமாகும். (எலும்பு
முறிவு ஏற்பட்டால், முதலில் எலும்பை ஒழுங்கு படுத்திக் கட்டிக் கொண்டு அதன் பின் துத்தி இலை வைத்தியம் தொடங்க வேண்டும்)
02. பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து ஒரு கிராம் அளவாகக் காலை மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும். (1451) (Harish)
03. பிரண்டைச் சாற்றில் புளி, உப்பு கலந்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பற்றுப் போட்டால், சதைப் பிறழ்ச்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு வீக்கம், எலும்பு முறிவு ஆகியவை தீரும்.
04. பிரண்டைத் துண்டுகளை நெருப்பில் வாட்டி எடுத்து, சாறு பிழிந்து, அத்துடன் மஞ்சள் தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் குழம்புப் பதத்தில் கிளறி , அடிபட்ட வீக்கம், சதைப் பிடிப்பு, சுளுக்கு, எலும்பு முறிவு ஆகியவற்றிற்குப் பற்றுப்போட நல்ல பலன்கிடைக்கும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக