மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 30 மே, 2021

எண்ணெய் வகைகள் (மருத்துவம்) (Medicinal Oils)

       குமரி எண்ணெய்

 01.   விளக்கெண்ணெய் ஒரு கிலோ, 10 முறை கழுவிய சோற்றுக் கற்றாழைச் சோறு ஒரு கிலோ, பனங்கற்கண்டு அரைக் கிலோ, வெள்ளை வெங்காயச் சாறு அரைக் கிலோ ஆகியவற்றைக் கலந்து நீர் சுண்டக் காய்ச்சினால் கிடைக்கும் எண்ணெய்க்குப் பெயர்  குமரி எண்ணெய். ( சோற்றுக் கற்றாழைக்குக் குமரி என்றும் ஒரு பெயர் உண்டு ).இந்த எண்ணெயைத் தயாரித்துப் புட்டியில் அடைத்து வைத்துகொண்டு தேவைப் படும் போது பயன்படுத்தலாம். இந்த எண்ணெயில் ஒரு தேக்கரண்டி வீதம் காலையும் மாலையும்  கொடுத்தால் மலச் சிக்கல் தீரும்.


      தாழம்பூ எண்ணெய்

01.   தாழம் பூவிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். இதைத் தலைவலி, உடல்வலி முதலியவைகளுக்கு மேலுக்குத் தடவலாம். இதைக் காது வலிக்கும் இரண்டொரு துளி விடலாம்.

 

        தான்றி எண்ணெய்

01.   தான்றிக்காய் எண்ணெய் தொடர்ந்து பயன் படுத்தி வந்தால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

 

         புன்னை எண்ணெய்

01.  புன்னை எண்ணெய் பூசி வர மகாவாத ரோகம், முன் இசிவு, பின் இசிவு, கிருமி ரணம், சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும்.

  

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

==========================================================


 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக