01. அத்தி மரத்தின் பூவில் சாறு எடுத்து தினசரி 2 வேளை மூன்று நாள் கண்களில் விட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.(021)
02. இரவில் படுக்கையில் இருந்து கொண்டு ( கும் இருட்டில் ) கண்களை 8 திசைகளிலும் சுழற்றி ( ஏதாவது தென்படுகிறதா என்று பார்க்கும் முயற்சி ) வந்தால் கண் நரம்புகள் பலப்படும். பார்வை தெளிவாகும்.(046)
03. கண்டங்கத்தரிப் பூக்கள் 100 கிராம் எடுத்து நிழலில் உலர்த்தி, சீரகம், திப்பிலி, நெல்லி முள்ளி சேர்த்துப் பொடித்து, தினமும் இரண்டு கிராம் வீதம் பாலில் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கண் பார்வை சீரடையும்.
04. கறிவேப்பிலை தினமும் துவையலாகச் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.(044) (802)
05. கறிவேப்பிலையை அரைத்து தினமும் உணவுடன் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை தெளிவடையும். கண்ணாடி அணிய வேண்டியதில்லை..
06. கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.
07. சித்திரை, வைகாசி மாதங்களில் பொன்னாங்கண்ணி கீரை தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும்.(025)
08. தான்றிக் காய்தோலை உரித்துப் பொடி செய்து கால் தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து காலையில் சாப்பிட்டு வர, கண் பார்வை கூர்மையாகும்.(014)
09. தான்றிக் காய்ப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து நீரிலோ, தேனிலோ ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
10. பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.(766)
11. பொன்னாங் கண்ணிக் கீரையை உப்பு சேர்க்காமல் வேக வைத்து இளஞ் சூட்டில் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கண் பார்வை தெளிவு பெறும்.
12. பொன்னாங்கண்ணி இலையைக் காலையில் மென்று தின்று, பால் பருகி வந்தால்,கண் பார்வை தெளிவு பெறும்.(006)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )17]
{31-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக