மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 31 மே, 2021

கருத்தடை (Contraceptive)

01.   அன்னாசிப் பழம், கருஞ்சீரகம், வெல்லம் சேர்ந்த கலவை கருத் தடைக்கு உதவும். (598)

 

02.   எலுமிச்சம் பழ விதைகள் 15, வெற்றிலைக் காம்பு 15  இரண்டையும் எடுத்து நன்கு அரைத்து மாத விலக்கு ஏற்பட்ட நாளன்று  ஒரு சுண்டைக் காயளவு வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு காலை மாலையாக தொடர்ந்து 9 நாட்கள் சாப்பிட வேண்டும். 12-ஆம் நாள் முதல் 21-ஆம் நாள் வரை உடலுறவு கூடாது. இது மிகச் சிறந்த கருத்தடை மருந்தாகும். (ஆதாரம்: ”நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

03.   எள், பப்பாளிப் பழத்தை உடல் உறவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் கருத் தரிப்பைத் தவிர்க்கலாம். (586) (1874)

 

04.   கருஞ்சீரகம், அன்னாசிப் பழம் வெல்லம் கலந்த கலவை  கருத் தடைக்கு உதவும்.(598)


05.   பப்பாளிக் காயை (பழுக்காத) தோல் சீவித் துண்டுகளாக நறுக்கி, உரலில் போட்டு இடிக்க வேண்டும். அதில் ஒரு சுண்டைக் காய் அளவு பெருங்காயம் சேர்த்து இடித்து சாறு பிழிய வேண்டும். ஒரு தம்ளர் ( 3 அவுன்சு) சாறு எடுத்து மாத விலக்கு ஏற்பட்ட நாள் முதல் 3 நாட்களுக்கு காலை மாலை என இரு வேளைகள் குடிக்க வேண்டும். மருந்து சாப்பிட்ட நாள் முதல் 21 நாட்கள் உடலுறவு கூடாது. இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் கரு உண்டாகாமல் நிரந்தரமாகத் தடுக்கலாம் (ஆதாரம்: “நாட்டு மருத்துவமணி நாகம்மாநூல்)

 

============================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )17]

{31-05-2021}

==========================================================


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக