மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 31 மே, 2021

கருப்பை - உதிரச்சிக்கல்.

01.  அரிசி மாவை ஆவியில் அவித்து, தேங்காய், கருப்பட்டி சேர்த்து உண்டு வர,பெண்களுக்கு ஏற்படும் உதிரப் போக்கு சமன்படும் (553)

 

02.  கிராம்புப் பொடியைப் பனை வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உதிரச் சிக்கலால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.  (635)

 

03.  சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வர உதிரச் சிக்கல் தீரும். (219)

 

04.  சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சம அளவு பொடித்து, பனை வெல்லம் கலந்து சோம்பு நீருடன் கொடுத்து வர, உதிரச் சிக்கல் நீங்கி கருப்பை பலம் பெறும். (607)

 

05.  செம்பருத்திப் பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும்

 

06.  நன்னாரி வேரை இடித்துச் சாறு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வர, இரத்தக் கோளாறுகள் நீங்கும். (558)


=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021}

==========================================================


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக