மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 31 மே, 2021

கண் எரிச்சல் (Amaurosis)

01.   அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்துப் பொடி செய்து தேன் கலந்து சுடு நீரில் சாப்பிட கண் எரிச்சல் குணமாகும். (016)

 

02.   அரைக் கீரை தினமும் சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சியுறும். கண் எரிச்சல் நீங்கும். (003)

 

03.   சோற்றுக் கற்றாழை மடலின் தோலை நீக்கி, அதன் சோற்றை மட்டும் நன்கு கழுவி, கண்களின் மீது வைத்துக் கட்டினால் கண் எரிச்சல் தீரும். (001)

 

04.      நந்தியாவட்டைப் பூக்களைக் கண்களின் மீது வைத்துக் கட்டி வந்தால், கண் எரிச்சல் நீங்கும்.

 

05.   நந்தியாவட்டைப் பூவால் ஒற்றடம் கொடுக்க கண் எரிச்சல் குணமாகும். பூச்சாறு 2 துளி கண்ணிலும் விடலாம்.

 

06.   நந்தியாவட்டைப் பூவால் ஒற்றடம் கொடுத்தால் கண் எரிச்சல் நீங்கும். (008)

 

07.      நல்லெண்ணெயில் நந்தியாவட்டைப் பூக்களைப் போட்டு 30 நாட்கள் வெயிலில் வைத்து, கண்களில் 5 துளிகள் விட, கண்ணெரிச்சல், கண் சிவப்பு தீரும்.

 

08.   நாவற் பழத்தை ஒரு நாள்விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வர கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் நிற்கும்.(029)

 

09.   நெருஞ்சில் செடி இரண்டு, ஒரு கைப்பிடி அருகம்புல் ஆகியவற்றை நசுக்கி ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வைத்துக் கொண்டு காலை மாலை 50 மி.லி. வீதம் 3 நாள் குடித்து வந்தால் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் ஆகியவை தீரும்.

 

10.   நெருஞ்சில் செடி, அறுகம் புல் இரண்டையும் சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால், கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.  (1428)

 

11.   முசு முசுக்கை இலைச் சாறு சம அளவு நல்லெண்ணையில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி, வாரம் ஒரு முறை தலை முழுகி வந்தால், கண் எரிச்சல் குணமாகும். (013)

 

12.   முருங்கைப் பூவைப் பருப்புடன் சமைத்து உண்டு வந்தால் கண் எரிச்சல் தீரும்.   (1572)  வாய்க் கசப்பு மாறும்.  (1590)

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )17]

{31-05-2021}

==========================================================


 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக