1)
அமுக்கராங் கிழங்கைப் பச்சையாகக் கொண்டு வந்து பசுவின்
நீர் விட்டு அரைத்து, கழலை (கிராந்தி), கழுத்துக் கழலை ( கண்ட மாலை )., வீக்கம், இடுப்பு வலி இவைகளுக்குப் பற்றுப் போட்டால் இவை விலகும்.
2) உத்தாமணி இலையை சிறிது வேப்பெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடம் கொடுத்து வந்தால் நரம்பு இசிவு கண்டமாலை ஆகியவை
குணமாகும்.(1662)
3) மாவிலங்கப் பட்டைக் கசாயம் காலை, மாலை சாப்பிட்டு
வந்தால் சிறுநீரகத்தில் கல்லடைப்பு நீங்கும். (1541)
வயிற்றுப்
புண் குணமாகும். (1518) கண்டமாலை புண் குணமாகும். (1593)
விஷகடி
தீரும்.
(1608)
4) விஷ்ணு கிராந்தி சமூலம் 48 நாட்கள் உட்கொள்ள கண்டமாலை குணமாகும்.(38)
5) விஷ்ணுகிராந்தி சமூலம் எடுத்து அரைத்து ஒரு நெல்லிகாய் அளவு தினசரி ஒரு வேளை வீதம் 48 நாட்கள்
உட்கொண்டு வந்தால் கண்டமாலை குணமாகும். (038)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )17]
{31-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக