மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 29 மே, 2021

இடுப்பு வலி (Lumbago)

 01.  அமுக்கராங் கிழங்கைப் பச்சையாகக்  கொண்டுவந்து பசுவின் நீர் விட்டு            அரைத்து, கழலை (கிராந்தி), கழுத்துக் கழலை ( கண்ட மாலை )., வீக்கம்,               இடுப்பு வலி இவைகளுக்குப் பற்றுப் போட்டால் இவை விலகும்.

 

02.  ஆடாதொடை இலை, நுணா இலை, வாதநாராயணன் இலை ஆகியவற்றை வகைக்கு ஒரு கைப்பிடி எடுத்து, இத்துடன் 50 கிராம் உளுந்து, தலா அரை தேக்கரண்டி மஞ்சள், கடுகு, சேர்த்து, முட்டையின் வெள்ளைக் கரு விட்டு நன்கு அரைத்து  கழுத்து வலி, மூட்டு வீக்கம், மூட்டு வாதம், இடுப்பு வலி உள்ள இடங்களில் பற்றுப் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவ வேண்டும்.

 

03.  உத்தாமணி இலையை வதக்கித் துணியில் கட்டி ஒற்றடம் கொடுக்க, கீல் வாதம் (மூட்டு வலி),முடக்கு வாதம்,வாதக் குடைச்சல், இடுப்பு வலி முதலியன குணமாகும்.

 

04.  உத்தாமணி இலை, நொச்சி இலை இரண்டையும் சேர்த்து வதக்கி ஒற்றடம் கொடுத்து வந்தால் இடுப்பு வலி, மூட்டு வலி ஆகியவை தீரும்., (1442)

 

05.  ஓமத்தை ஒரு கரண்டி அளவுக்கு எடுத்து சிறிதளவு தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, 100 மி.லி தேங்காய் எண்ணெய் விட்டு, மீண்டும் கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் கற்பூரப் பொடியைக் கலந்து  இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

 

06.  கோதுமையைப் பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட்டு வர இடுப்பு வலி  குணமாகும் .(319)

 

07.  சுக்கு, பெருங்காயத்துடன், பால் சேர்த்து அரைத்து இடுப்பு வலி, தலைவலி, மூட்டு வலிகளுக்குப் பற்றுப் போடலாம்.

 

08.  துத்திக் கீரையை அடிக்கடி கடைந்தோ பொரியல் செய்தோ உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் வாயு சம்பந்தப் பட்ட வியாதிகள் நீங்கும். இடுப்புவலி குணமாகும். பழைய மலத்தினால் உண்டாகும் பூச்சிகள் ஒழியும்

 

09.  தொட்டாற் சுருங்கி இலையை ஒரு பெரிய மண் குடத்தில் போட்டு நீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி நீங்கும்.

 

10.  நொச்சி இலைச் சாறில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கிராம் மிளகுத்தூள், மற்றும் சிறிது நெய் சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் ஆகியவை குணமாகும் .மருந்து சாப்பிடுகையில் உணவுக் கட்டுப் பாடு அவசியம்.

 

11.  நொச்சி மற்றும் உத்தாமணி இலைகளை வதக்கி ஒற்றடம் கொடுத்தாலும் மூட்டு வலி, இடுப்பு வலி தீரும். (1442)

 

12.  பூண்டுப் பற்களுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி தீரும்.   (1174)

 

13.  மிளகாய்ப் பூண்டுச் செடியின் இலைகளைப் பறித்து அரைத்து இடுப்பு வலியுள்ள இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் இடுப்பு வலி குணமாகும்.

 

14.  முருங்கைக் கீரையை சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூட்டு வலி, இடுப்பு வலி ஆகியவற்றுக்கு ஒற்றடம் கொடுக்கலாம்நிவாரணம் கிடைக்கும்.  (1569)  வாத வலி  தீரும்.  (1739)

 

15.  வெந்தய  இலையுடன் தேங்காய்ப் பால், முட்டை, நெய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.

 

16.  வெந்தயக் கீரையுடன் கோழிமுட்டை, தேங்காய்ப் பால், நெய் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் இடுப்பு வலி கட்டுப்படும்.

 

17.  வெந்தயம் 100 கிராம் எடுத்து வறுத்து, பொடித்து 200 கிராம் வெல்லம் சேர்த்து உண்டால் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி குறையும்.


18. வெள்ளைப் பூண்டு, கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும்.. (1174)


 

 ========================================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !

(02.  ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

=======================================================================

                                                          ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )15]

{29-05-2021}

==========================================================


 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக