மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 31 மே, 2021

கண் - குத்துக்காயம் (Knock by Objects)

01.   ,எலுமிச்சம் பழச் சறினை வடிகட்டி ஐந்து சொட்டுகள் வீதம் இரண்டு கண்களிலும் விட வேண்டும். கண்ணில் குச்சி போன்ற பொருள் ஏதேனும் குத்திவிட்டால், இவ்வாறு சாறு விடவேண்டும். சிறிது நேர எரிச்சலுக்குப் பின் கண் பாதிப்புச் சரியாகிவிடும். இரண்டு நாள்கள் இவ்வாறு செய்ய வேண்டும். காயம் சரியாகிவிடும்.

 

02.   வெங்காயச் சாறு எடுத்து இரண்டு கண்களிலும் விடலாம். காலை, மாலை இரண்டு வேளை வீதம் மூன்று நாள்கள் வெங்காயச் சாறிணை ஐந்து சொட்டு வீதம் விட்டு வந்தால், கண்களில் பூ விழாது; நீர் ஒழுகுதல் தீரும். குத்துக் காயமும் குணமாகும். (ஆதாரம்: நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )17]

{31-05-2021}

==========================================================


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக