மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 5 ஜூன், 2021

சிறுநீர் - இரத்தம் கலந்து வருதல் (Bleeding with urine)

01.   அத்திப் பால் 15 மி.லி யுடன் வெண்ணெய் சர்க்கரை கலந்து, காலை மாலை கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறு நீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

 

02.   அம்மான் பச்சரிசி இலையை நெல்லிக்காயளவு நன்கு அரைத்து, பசும்பாலில் கலக்கி, காலையில் மட்டும் 3 நாள் கொடுக்கச் சிறுநீருடன் குருதிப் போக்கு, மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் ஆகியவை தீரும்.

 

03.   கீழாநெல்லிச் சாறு எடுத்து, புதிதாகக் கறந்த பாலில் அதைக் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீருடன் இரத்தம் வருவது நின்றுவிடும் (962)

 

04.   நெருஞ்சில் சமூலச் சாறு ஒரு அவுன்ஸ் (30 மி.லி.) எடுத்து சிலநாட்களுக்கு மட்டும் குடித்து வந்தால்  சிறு நீருடன் இரத்தம் போவது குணமாகும்.  (1427)

 

05.   விடத் தேர் செடியின் கொழுந்தும் ஏலக்காயும் சம அளவு சேர்த்து அரைத்து சிறு உருண்டை எடுத்து தயிரில் இட்டுக் கலக்கி அருந்தினால் சிறு நீரில் இரத்தம் வருதல் நின்றுவிடும்.(987)

 

==========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )22]

{05-06-2021}

==========================================================


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக