01. பூண்டுப்பல், ஓமம், சுட்ட வசம்பு ஆகியவை சம அளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் சன்னி குணமாகும். (167)
02. வேப்ப எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து தலை முழுகி வந்தால், சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.
(1035) (1654) (1969)
03. ஓமம், வெள்ளைப் பூண்டு, வசம்பு ஆகியவை சம அளவு எடுத்து அரைத்து ஒரு சுண்டைக் காய் அளவு இரண்டு வேளை வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் ஜன்னி குணமாகும்.(167)
04. பற்படாகம், தூதுவேளை, கண்டங்கத்தரி, விஷ்ணு கிராந்தி சம அளவு எடுத்து கசாயம் வைத்து வேளைக்கு 10 மி.லி
வீதம் மூன்று வேளைகள் குடித்து வந்தால் சன்னி சுரம், டைபாய்டு சுரம் ஆகியவை தீரும்.
(1434)
05. வெள்ளைப் பூண்டு, வசம்பு, ஓமம் சம அளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் சப்பிட்டு வந்தால் சன்னி (ஜன்னி) குணமாகும்.
(167)
06. வேப்பெண்ணெயில் தலை முழுகி வர சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் குணமாகும்.
(1035) (1107)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )21]
{04-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக