01. ஊமத்தம் பூவை இரவு
தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். மறு நாள் காலை தலைக்குத் தேய்த்துக் குளிக்க வைக்கவும்.
5-7 நாள்
இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் சித்தப்பிரமை
உன்மத்தம், பைத்தியம் ஆகியவை குணமாகிவிடும்.
02. கறிவேப்பிலை ஒரு பிடி எடுத்து, சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து
அரைத்து கோலிக்குண்டு அளவு எடுத்து மோரில் கரைத்து வெறும் வயிற்றில் 45 நாள்கள் கொடுக்கப் பித்த மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும்.
03. கறிவேப்பிலையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து
அரைத்து மோர் கலந்து 48 நாட்கள் பருகினால் சித்தப்பிரமை நீங்கும்.
04. தூதுவேளைக் காயை உலர்த்தி, தயிர், உப்பு
ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டு வர ,பயித்தியம், இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை
தீரும். (1408) (1418)
05. பருத்தி விதை, ஏலம், திப்பிலி, நெற்பொரி ஆகியவற்றை இடித்து, பொடியாக்கி சர்க்கரை சேர்த்து வேளைக்கு இரண்டு கிராம் வீதம் மூன்று வேளைகளும் சாப்பிட்டு வந்தால் பைத்தியம் குணமாகும். (1753)
06. பிரமிய வழுக்கை இலைச் சாற்றுடன் சம அளவு நெய் கலந்து காய்ச்சி வடித்து காலை மாலை ஒரு தேக்கரண்டி கொடுத்து வந்தால் சித்தப் பிரமை, காக்காய் வலிப்பு தீரும்.
(1075) (1604) (1656)
===========================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )21]
{04-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக