01. ஆரைக்கீரை அளவுக்கு அதிகமாகச் சிறுநீர் பிரிவதைத் தடுக்கும். எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள் ஆரைக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டு நலம் பெற வேண்டும். (1984)
02. கசகசா பொடி அரை தேக்கரண்டி எடுத்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் அதிமூத்திரம் சரியாகும்.(1679)
03. நாவல் கொட்டை சூரணம் 2 கிராம் நீரில் கலந்து காலை மாலை குடித்து வர மது மேகம், அதி மூத்திரம் கட்டுப்படும். (623)
04. நித்திய கல்யாணிப் பூ ஐந்து அல்லது ஆறு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி, கால் லிட்டராக்கி ஒரு நாளைக்கு நான்கு வேளை கொடுக்க , (அதி மூத்திரம்) அடிக்கடி சிறுநீர் போதல், (அதி தாகம்) அடிக்கடி தாகம் எடுத்தல், உடல் பலவீனம், மிகு பசி (எப்போதும் பசி உணர்வு), பசியின்மை ஆகியவை தீரும்.
05. மருதாணி இலை 10 கிராம் எடுத்து பால் விட்டு அரைத்து, பாலிலேயே கலந்து சாப்பிட்டு வந்தால் அதி மூத்திரம் ( மிகையாக சிறுநீர் கழிதல் ) தீரும். (1526)
06. முருங்கைப் பிசினை உலர்த்திப் பொடி செய்து, அரை தேக்கரண்டி, பாலில் காலை மாலை கொள்ள தாது பலம் உண்டாகும். மிகுதியாகச் சிறுநீர் கழித்தல் தீரும். உடல் வனப்பு உண்டாகும்.
07. முருங்கைப் பிசினைப் பொடி செய்து அரை கரண்டி பாலில் கரைத்து காலை, மாலை அருந்தி
வந்தால் தாது பலம் உண்டாகும்.
(1620) உடல் வனப்பு உண்டாகும்.
(1633) அதி மூத்திரம்
சரியாகும்.
(1659)
08. முள்ளங்கியைச் சமைத்து உண்டு வந்தால் அதிமூத்திரம் குணமாகும்.
(1639)
09. வாழைப் பிஞ்சுடன் அத்திக் காய் சேர்த்து உண்டு வந்தால் அதிகமாக
வெளியேறும் மூத்திரம் கட்டுப்படும்.
===========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )21]
{04-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக