01. அல்லி விதையைச் சேகரித்துத் தூளாக்கிப் பாலுடன் கலந்து குடித்து வரத் தாதுவிருத்தி உண்டாகும். கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும்
02. கீழாநெல்லியுடன் சமன் கரிசிலாங்கண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, இரத்தமின்மை தீரும்.
03. கொய்யாப் பழம் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படும்.(1261)(1868). கொய்யாப் பழம் வயிற்றுப் புண்களை ஆற்றும்.(1294)
04. செடிபசலைக் கீரையை ( பாலா கீரை ) சமைத்து உணவுடன் சேர்த்து வந்தால், கல்லீரல் வலுவடையும். மண்ணீரலும் வலுவடையும் (978)
05. பப்பாளிப் பழம் கல்லீரலைப் பலப் படுத்தும். உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் தன்மை பப்பாளிப் பழத்திற்கு உள்ளது.
06. பாலா கீரையை ( செடிப்பசலைக் கீரை ) அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கல்லீரல், மண்ணீரல் வலுவடையும். (978)
07. பூவரசுப் பழுப்பு இலை 2 , காய்
4 , பூவரச மரப் பட்டை ஒரு துண்டு, சீரகம் 2 தேக்கரண்டி, சோம்பு ஒரு தேக்கரண்டி, கீழா நெல்லி ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் 4 ,
சிறு நெருஞ்சில் 5 கிராம், ஆகியவற்றைச் சேர்த்துச்
சிதைத்து 3 கோப்பை நீரில் போட்டு அரைக் கோப்பையாகக் காய்ச்சி அருந்தி வந்தால், கல்லீரல் பலப்படும்; கை,கால்
நடுக்கம் குறையும். மஞ்சள் காமாலை
நெருங்காது.
========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக