01. கரிசலாங்கண்ணித் தூள், மருதம் பட்டைத் தூள் ஆகியவை தலா ஒரு கிராம் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.(1467)
02. கால் தேக்கரண்டி கழற்சிக்காய்ப் பொடி, அரைத் தம்ளர்
மோர், சிறிதளவு பெருங்காயம், தேவைக்கு ஏற்ப உப்பு கலந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வந்தால் கல்லீரல். மண்ணீரல் வீக்கம் குறைந்து ஈரல் ( கல்லீரல், மண்ணீரல் ) பலப்படும்.
03. கொள்ளுக் காய்வேளைச் செடியின் வேருடன் சிறிது மிளகு சேர்த்து சிதைத்து கசாயம் வைத்து அருந்தி வந்தால் கல்லீரல். மண்ணீரல் வீக்கம் சரியாகும்.(1386) சிறுநீரக வீக்கம் சரியாகும் (1702)
04. நொச்சி இலைச் சாறு, பசுங்கோமியம் ஆகியவற்றைக்
கலந்து 5 மி.லி
எடுத்து காலை மாலை சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரை, நுரையீரல் வீக்கம் குறையும்.
(980) (985) (1443) (2007)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக