01.
கீழாநெல்லி இலைகளுடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.(959)
02.
கீழாநெல்லிச் சாறுடன் தேன் கலந்து பருகி வந்தால் சிறுநீரக வீக்கம் குறையும். (1935)
03. சுரைக்காய் சாறையும் எலுமிச்சம் பழச் சாறையும் கலந்து அருந்தி வந்தால் சிறு நீரக நோய்கள் குணமாகும். (958) (1906)
04. திருநீற்றுப்
பச்சிலைச் சாற்றுடன் சம அளவு பால் கலந்து காலை, மாலை என இரு வேளை 100 மி.லி.வீதம் அருந்தி வந்தால் வெட்டை நோய்கள், மேக
சம்பந்தமான நோய்கள், பீனிசம், நாட்பட்ட
கழிச்சல், உள் மூலம், சிறுநீரக சம்பந்தமான நோய்கள் முதலியவை
குணமாகும்.
05. பரங்கி விதை, வெள்ளரி விதை, பூனைக்காலி விதை ஆகியவற்றைச் சேர்த்துக் கசாயம் வைத்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். (1471)
06. மந்தாரை மலர் மொட்டுகளை எடுத்து நீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி காலை, மாலை பருகி வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். (986)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )21]
{04-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக