01. கீழாநெல்லி இலைகளைக் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் நீங்கும்.(959)
02. கொள்ளுக் காய்வேளைச் செடியின் வேருடன் சிறிது மிளகு சேர்த்து சிதைத்து கசாயம் வைத்து அருந்தி வந்தால் கல்லீரல். மண்ணீரல் வீக்கம் சரியாகும்.(1386)
சிறுநீரக வீக்கம் சரியாகும் (1702)
03. சுரைக்காய்ச் சாறு எலுமிச்சம்பழச் சாறு கலந்து அருந்தி வந்தால் சிறு நீரக நோய்கள் குணமாகும்.
(958)
04. நெருஞ்சில் விதைகள் சிறுநீரக நோய்களை நீக்கும். சதையடைப்பை விலக்கும். (1201)
05. பூனைக் காலி விதை, பரங்கி விதை, வெள்ளரி விதை மூன்றையும் சம அளவு எடுத்து நீர்விட்டுக் கசாயம் செய்து காலை மாலை
30 மி.லி வீதம் குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். (1471)
06. மந்தாரை மலர் மொட்டுகளை நீரில் இட்டு சுண்டக் காய்ச்சி காலை மாலை பருகி வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.(986)
07. முலாம் பழம் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் நீங்கும்.(1196)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )22]
{05-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக