01. இலவம் பிசினைப் பொடி செய்து சிராய்ப்புக் காயங்கள் மீது தடவி வர காயம் குணமாகும்.(1011)
02. கிணற்றடிப் பூண்டின் இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு ஆகியவிற்றில் பற்றிட்டால் சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.
03. கீழாநெல்லியின் இளங்கொழுந்தை எடுத்து குடிநீர் செய்துசீதக் கழிச்சலுக்குக் கொடுக்கலாம். இலையை உப்பு சேர்த்து அரைத்து சொறி சிரங்குகளுக்குப் பூசலாம் உப்பில்லமல் அரைத்து சதைச் சிதைவுக்குப் பற்றிடலாம்.
04. நம் எச்சிலுக்கு மருத்துவக் குணம் உண்டு. சிராய்ப்புப் புண் மீது எச்சில் தடவி வந்தால், விரைவில் குணமடையும்.
(530)
05. மருதாணி இலைகளை அரைத்து நீரில் கலக்கி அதைக் கொண்டு சிராய்ப்புக் காயத்தைக் கழுவி வந்தால், விரைவில் குணமாகும்.
(1028)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )21]
{04-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக