மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 4 ஜூன், 2021

சிரங்கு (Itch)

 

01.   எழுத்தாணிப் பூண்டின் இலைகளை இடித்துச் சாறெடுத்து சம அளவு எள் எண்ணெய் சேர்த்து, காய்ச்சி, வடிகட்டி தினமும் காலை மாலை சொறி, சிரங்கு, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் அவை நீங்கிடும்.

 

02.   சிலந்தி நாயகம் இலைகளே மருத்துவப் பயன்கள் உடையவை. இலையை அரைத்து நகச்சுற்று, புண், சிரங்கு ஆகியவற்றுக்குப் பூச குணமாகும்.

 

03.   சிறு செருப்படை இலைச் சாறு, வெங்காயச் சாறு ஆகியவை சம அளவு கலந்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, நன்கு வடிகட்டி, காலை மாலை குடித்து வந்தால் இரண்டொரு முறை பேதியாகும். இதனால் சிரங்கு, வெள்ளைபடுதல் ஆகியவை குணமாகும். (620)

 

04.   தான்றிக் காயை நீர் விட்டு அரைத்துப் பசையாக்கி புண், சிரங்கு உள்ள இடங்களில் பூசி வரலாம்.

 

05.   துளசி இலைகளை அரைத்து உடலில் பூசிக்குளித்து வந்தால் நமைச்சல், சிரங்கு ஆகியவை தீரும்.  (1402)

 

06.   நுணா இலையை அரைத்து புண்கள், சிரங்கு ஆகியவற்றால்   பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.

 

07.   புன்னைப் பூவை அரைத்துச் சிரங்கிற்குப் பற்றுப் போட்டு வந்தால் சிரங்கு விரைவில் ஆறும். (1482)

 

08.   பூவரசம் பூவை அரைத்துச் சிரங்குகளின் மீது பூசி வந்தால் சிரங்குகள் தீரும். .

 

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )21]

{04-06-2021}

 

==========================================================


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக