01. அழிஞ்சல் இலைகளைப் பறித்து வந்து அரைத்து ஒரு கிராம் அளவுக்கு காலை மாலை உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குன்ம நோய் தீரும் (325)
02. கழற்சிக் காய்ப் பொடியுடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து குடித்து வந்தால் குன்ம நோய் ( இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கால்லீரல் சார்ந்தது ) நீங்கி உடல் வலிமை அடையும்.
03. கழற்சிக்காய்ப் பொடி சிறிதளவு, வெள்ளை உள்ளி (வெங்காயம்), முருங்கைப்
பட்டை, சுக்கு, வசம்பு
ஆகியவற்றைத் தண்ணீரில் இட்டு, எட்டில் ஒன்றாக சுண்டக் காய்ச்சி, குடித்து வந்தால், குடல்வாதம், சூலை, குன்மம், முதலிய
நோய்கள் போகும்.
04.
கொள்ளுக் குடி நீருடன் சுக்குத் தூளும், பெருங்காயமும் சேர்த்துப் பருகி வந்தால் குன்மம் குணமாகும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )21]
{04-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக