01. எருக்கந்தளிர் ஒரு கைப்பிடி, சிறிது மஞ்சள் இரண்டையும் அம்மியில் வைத்து அரைத்து, ஒரு பாலாடை எருக்கம் பால், அரைப் பாலாடை எள் எண்ணெய் ஆகியவற்றை அத்துடன் கலந்து, ஒரு கரண்டியில் இட்டு தீயில் காட்டி அரை வேக்காட்டில் எடுத்து பொறுக்கும் சூட்டில் விரலில் வைத்துக் கட்ட வேண்டும். மூன்று நாட்கள் கட்டைப் பிரிக்கக் கூடாது. மூன்றாம் நாள் இதே மருந்தைத்தயார் செய்து கட்ட வேண்டும். இந்தக் கட்டையும் மூன்று நாட்கள் பிரிக்க் கூடாது. இப்படிச் செய்தால் நகச்சுற்று குணமாகும். (ஆதாரம்: ” நாட்டு மருத்துவமணி நாகம்மா “ நூல்)
02. கிரந்தி நாயகம் இலையை அரைத்து நகச்சுற்றுக்குக் கட்டி வந்தால் விரைவில் குணமாகும்.(320)
03. நகச்சுற்று வேதனைக்கு சிலந்தி நாயகம் இலையை அரைத்து விரலில் கட்டி வந்தால் இரத்தம், சீழ் வெளியேறி நகச்சுற்று குணமாகும்.(307)
04. \நொச்சி இலை 50 கிராம், மருதாணி இலை 50 கிராம், எருக்கம் பூ இரண்டு ஆகியவை சேர்த்து அரைத்துக் கட்டினால் நகச்சுற்று ஆறிவிடும்.(316
05. படிக்காரத்தைப் பொரித்து நீர் விட்டுக் கெட்டியாகக் குழைத்து நகச் சொத்தையின் மீது வைத்துக் கட்டினால், நகச்சுற்று விரைவில் குணமாகும்.(304)
06. பால் ஏட்டுடன் விளக்கெண்ணெய் சேர்த்துக் குழைத்து வெண்ணெய் போல் ஆக்கி நகத்தைச் சுற்றிலும் போட்டு வர நகச்சுற்று குணமாகும்.(312)
07. மஞ்சள், அறுகம்புல், இரண்டையும் அரைத்து சுண்ணாம்பு சிறிது கலந்து நகத்தைச் சுற்றிப் பூசிவந்தால் நகச்சுற்று குணமாகும்.(572)
08. மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து விரலில் வைத்துக் கட்டவேண்டும். மூன்று நாள் கட்டைப் பிரிக்கக் கூடாது. நான்காம் நாளும் இதே மருத்துவத்தை மீண்டும் செய்தால் போதும் (ஆதாரம் : “
நாட்டு மருத்துவமணி நாகம்மா “ )
==================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )21]
{04-06-2021}
==================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக