மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 6 ஜூலை, 2021

நரம்பு - சிலந்தி (Abscess)

 

01.     அவரி இலை ஒரு பிடி, 2 சிட்டிகை சீரகம், பொரித்த பெருங்காயம், மிளகு சமனெடை சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து ஒரு நாளைக்கு 3 வேளையாகக் கொடுத்துவர நரம்புச் சிலந்தி, கீல் வாதம் ஆகியவை நீங்கும். உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும்.

 

02.     சீதேவி செங்கழுநீர் இலைகளை எடுத்து அரைத்து சிலந்திப் புண் மீது வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும். (463)

 

03.     நாயுருவிச் செடியைச் சுத்தம் செய்து இடித்துப் பிழிந்து துணியில் வைத்துக் கட்ட சிலந்திப் புண் ஆறும். (439)

 

04.     வேப்பம் பூவுடன் வேப்பம் விதையை அரைத்துக் கட்டி வந்தால் நரம்புச் சிலந்தி குணமாகும்.  (1761)

 

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக