மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 6 ஜூலை, 2021

நஞ்சு - முறிவு (anti-toxic-medicine)

 

    {அரளி விதை, எட்டிக் காய், கார்த்திகைக் கிழங்கு உண்டவர்களுக்குத் தரவேண்டிய நச்சு முறிவு மருந்து]\}

 

01.   அவரி வேர் 20 கிராம், மிளகு 10  கிராம் அரைத்து சுண்டைகாய் அளவு காலை மாலையாய் 10 வேளை கொடுக்க எட்டி, வாளம், கலப்பைக்கிழங்கு, நாவி, அலரி வேர் ஆகியவற்றின் நஞ்சு தீரும்.

 

02.   .ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். விஷத்தன்மை உடையது.     இதன் விஷம் முறிய தாமரைக் கிழங்கை அரைத்து பாலில் இரு வேளை மூன்று நாள், கொடுக்கலாம்.

 

03.   கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும்,   குப்பைமேனி இலைச்சாறும் மருத்துவரின் ஆலோசனைப்படி கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும் .மேலும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்

 

04.   வசம்பை அரைத்து விஷம் அருந்தியவர்களுக்கு, உடனேயே இரண்டு மூன்று தேக்கரண்டி கொடுத்தால் நஞ்சு வெளியே வந்து விடும்.

 

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக