01. வல்லாரை இலையுடன் தூதுவேளை இலையைச் சேர்த்து அரைத்து பாலில்
கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள சளிக்கட்டு
நீங்கும். (209)
(1606)
02. வல்லாரை இலைப் பொடி, தூதுவேளை இலைப்பொடி இரண்டையும் கலந்து ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து அருந்தி வந்தால் சுவாச உறுப்புகளில் சளித் தேக்கம்
நீங்கும். (1606)
03. இஞ்சி 10 கிராம், வெள்ளெருக்கம் பூ 3, மிளகு 6, இவற்றைச் சிதைத்து
அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சிக் காலை மாலை குடித்து வர, ஆஸ்துமா இரைப்பு, நுரையீரல் சளி அடைப்பு ஆகியவை
தீரும்.
04.
தூது வேளை இலைகளுடன் வல்லாரை
இலைகளையும் சேர்த்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள சளிக் கட்டு நீங்கும். (209)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக