01. ஆடாதொடை இலைச் சாறு 50 மி.லி எடுத்து மருதம் பட்டைத் தூள் 25
கிராம் எடுத்து இரண்டையும் வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் நோய்கள் குணமாகும்.(981)
02. தூதுவேளை
உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
03. பிரமதண்டு சமூலச் சாம்பல் மூன்று அரிசி எடை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, இரைப்பிருமல், நுரையீரல் நோய்க\ள் தீரும்.
(1475)
04. மருத மரப் பட்டைத் தூளுடன் ஆடாதொடை இலைச் சாறு சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் சாப்பிட்டு வர, நுரையீரல் நோய்கள் குணமாகும்.(981)
05. மருதம் பட்டைப் பொடி, ஆடாதொடைப் பொடி தலா அரைத் தேக்கரண்டி எடுத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வந்தால் நுரையீரல் புண் ஆறும். (1479)
06. விராலி இலை இருபது கிராம் எடுத்து இடித்துக் கால் லிட்டர் நீரிலிட்டு ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி அதில் 20 மில்லியைச் சிறிது பால் கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய்கள், கணச்சூடு, இருமல், சளி ஆகியவை தீரும்.
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]
{06-07-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக