01. இஞ்சிச் சாறு அரைப் பாலாடை, வெள்ளைப் பூண்டுப் பல் சாறு அரைப் பாலாடை, தேன் அரைப் பாலாடை எடுத்து ஒன்றாகக் கலந்து அருந்த வேண்டும். காலை மாலையாக மூன்று நாள் சாப்பிட வேண்டும். பிஞ்சுக் கத்தரிக் கார் சம்பார் வைத்து சாப்பிடலாம். நான்காம் நாளிலிருந்து பனை வெல்லம் ஒரு பெரிய நெல்லிக் காய் அளவு எடுத்து, ஒரு தம்ளர் நீரில் கலக்கவும். அத்துடன் ஒரு எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்து அத்துடன் சேர்க்கவும். இதைக் காலை மாலையாக ஏழு நாட்கள் சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றிலும், மாலையில் 5 மணி வாக்கிலும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் நெஞ்சு வலி முற்றிலும் குணமாகும்.(ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல்)
02. ஓம வல்லி இலை மூன்றினைக் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் நெஞ்சு வலி தீரும்.(109)
03. செம்பருத்திப் பூவை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி, பாலும் சர்க்கரையும்
சேர்த்து, காலை,
மாலை பருக மார்பு வலி, இதய பலவீனம் தீரும். காபி,
தேநீர், புகையிலை நீக்க
வேண்டும்
04. தான்றிகாயைப் பொடித்து தேனில் கலந்து உட்கொண்டால், மார்பு வலி, இருமல், தணியும். அம்மை
நோய்க்கும் நிவாரணமாகும்
05. துளசி விதை 100 கிராம், பன்னீர் 125 கிராம், சர்க்கரை 25 கிராம் சேர்த்து ஒன்றாகக் கலக்கிச் சாப்பிட நெஞ்சு வலி குணமாகும். (1173)
06. தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து, சுட வைத்து, நெஞ்சில் தடவி வந்தால், நெஞ்சு வலி குணமாகும்.
(1823)
07. வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி, வதக்கி, 2 தம்ளர் நீர் விட்டு சுண்டக் காய்ச்சி, அரைத் தம்ளர் வீதம் காலை, மாலை இரு வேளை குடித்தால் நெஞ்சு வலி தணியும்.
08. வெந்தயக் கீரை ஒரு பிடி எடுத்து சிறிதளவு புளி, காய்ந்த அத்திப் பழம் 2 (நறுக்கியது), உலர் திராட்சை 10, ஒரு தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, சிறிதளவு தேன் கலந்து பருகினால், மார்பு வலி, மூச்சடைப்பு சரியாகும்.
09. வெந்தயத்தை வேகவைத்து தேன் விட்டுப் பிசைந்து கூழாக்கி உட்கொண்டால் மார்பு வலி குணமாகும். (977) (1169)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]
{06-07-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக