மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 6 ஜூலை, 2021

நெறிக்கட்டி (Bubo)

 

 

01.   ஆமணக்கு எண்ணெய் விட்டு சிறுகுறிஞ்சான் இலைகளை வதக்கி நெறிக்கட்டிகளின் மீது வைத்துக் கட்டலாம்.

 

02.   ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக் கட்டிகள், அண்ட வாயு, தாய்ப் பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெறிக்கட்டுதல், ஆகியவை குணமடையும்.

 

03.   காக்கிரட்டை  இலையை உப்புச் சேர்த்து அரைத்து நெறிக்கட்டிகளுக்குப் பூச வீக்கம் கரையும்.

 

04.   தழுதாழை இலையை ஆலிவ் விதை எண்ணெயில் வதக்கிக் கட்ட யானைக்கால் வீக்கம், விரை வாதம், வாத வீக்கம், நெறிக் கட்டிகள் தீரும். (1101)

 

05.   நெறிக் கட்டிக்கு மூசாம்பரம் என்னும் கரியபோளம் நல்ல மருந்து. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அதில் இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி சுக்குப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளற வேண்டும். பின்பு, நீரில் கரைத்து வைத்த கரியபோளக் கரைசலை அத்துடன் சேர்த்துக் கிளறி, இறக்கி, இளஞ் சூட்டில் நெறிக்கட்டிமேல் பற்றுப் போட்டு வந்தால், வீக்கம் சரியாகும்.

 

06.      வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வந்தால் நெறிக் கட்டிகள் குணமாகும்.  (1636)

 

07.      வல்லாரை சூரணத்தை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் நெறிக்கட்டு நீங்கும்.  (464)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

 

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக