01. ஆடு தின்னாப் பாளைச் சாறு எடுத்து வேப்ப எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து காய்ச்சி ஆற வைத்து அந்தத் தைலத்தை கரும்படைக்குத் தடவி
வந்தால் குணமாகும்.(448)
02. எலுமிச்சம் பழச் சாறு இரண்டு பாலாடையும், துளசிச் சாறு இரண்டு பாலாடையும் சேர்த்துக் கலந்து பூசி வர வேண்டும்.உணவில் புளி, காரம் குறைத்துக் கொள்ள வேண்டும். 15 நாளுக்குள் படை நோய் சரியாகி விடும் (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல் )
03. எழுத்தாணிப் பூண்டின் இலைகளை இடித்துச் சாறெடுத்து சம அளவு எள் எண்ணெய் சேர்த்து, காய்ச்சி, வடிகட்டி
தினமும் காலை மாலை சொறி, சிரங்கு, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் அவை நீங்கிடும்
04. கருஞ் செம்பை இலையுடன் குப்பை மேனி இலை சேர்த்து அரைத்துக் கலக்கித் தடவி நன்கு காய்ந்த பின் குளித்து வர வேண்டும். சில தடவை இவ்வாறு செய்தால் படை மறைந்து விடும்.(1032)
05. கோவை இலைச் சாறுடன் , கருஞ் சீரகப்பொடி ஐந்து கிராம் சேர்த்து அரைத்து படை மீது தடவி ஒரு மணி நேரம் சென்ற பின் குளித்தால் படை குணமாகும். இவ்வாறு சில தடவைகள் செய்ய வேண்டும். (437)
06. திருநீற்றுப் பச்சிலை இலைச் சாற்றை படை முதலிய சரும நோய்களுக்கு நோய்கண்ட இடத்தில் பூசிவர
அவை எளிதில் மறையும்
07. துளசி இலையை எலுமிச்சம் பழச் சாறுடன் அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் படை, சொறி நீங்கும்.
08. துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து தேமல், படை மீது பூசி வந்தால், அவை விரைவில்
நீங்கும்.
09. நாயுருவி இலைச்சாற்றைத் தடவி வந்தால் தேமல், படை முதலியவை நீங்கும்.
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]
{06-07-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக