01. அறுகம் புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவிவர சொறி, சிரங்கு, படர்தாமரை ஆகியவை
போகும்.
02. எலுமிச்சம் பழச் சாற்றில் சந்தனக் கட்டையை உரைத்து, குழம்பினை படர் தாமரை மீது பூசி, நன்கு உலர்ந்த பின் கழுவி வந்தால் குணமாகும்.
03. கொன்றை இலையைத் துவையல் செய்து சோற்றுடன் கலந்து உண்ண மலம் கழியும். இலையை அரைத்து படர் தாமரைக்குப் பூசலாம்.
04. சந்தனக் கட்டையை எலுமிச்சம்பழச் சாற்றில் உரசி, அந்தத் தேய்வை, தடவி வந்தால், முகப் பருக்கள், படர் தாமரை ஆகியவை நாளடைவில் மறைந்துவிடும்,(853)
05. பவளமல்லி இலையை அரைத்துப் பூசி வந்தால் படர் தாமரை விலகும்.
06. பூவரசங் காயை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் பால் வரும். இந்தப் பாலை
எடுத்து படர் தாமரை மேல் தடவி வந்தால், விரைவில் குணமாகும். (1495)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]
{06-07-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக