மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 6 ஜூலை, 2021

நினைவாற்றல் - பெருக (Increase of Memory power)

 

01.  உருளைக் கிழங்கு. பாதாம் பருப்பு, வெண்டைக் காய், தக்காளி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.(782)

 

02.  கோரைக் கிழங்குப் பொடி ஒரு கிராம் எடுத்து சிறிதளவு தேன் கலந்து காலை மாலை சாப்பிடலாம். உடல்பொலிவு அடையும். நினைவாற்றல் பெருகும்.

 

03.  செம்பருத்தி மலரை பிள்ளைகள் உண்டு வந்தால் ஞாபக சக்தி நினைவாற்றல், புத்திக்கூர்மை, மூளை பலம் ஏற்படும். சிறுவர்கள் சாப்பிடும்பொழுது இப்பூவிலுள்ள மகரந்தக் காம்பை நீக்கி  விட வேண்டும்.

 

04.  தக்காளி, பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக் கிழங்கு இவைகளைத் தினமும் உணவுடன் சேர்த்து வந்தால் நினைவாற்றல்   பெருகும். (782)

 

05.  பாதாம் பருப்பு, வெண்டைக் காய், உருளைக் கிழங்கு, தக்காளி ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் பெருகும்.(782)

 

06.  மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நினைவு ஆற்றல் அதிகரிக்கும்.    (262)

 

07.  வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம், இரண்டையும் சேர்த்துப் பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.(751)

 

08.  வல்லாரை இலைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் பெருகும்.(743)

 

09.  வல்லாரைக் குடிநீர் ( கழாயம் ) நினைவாற்றலைத் தூண்டும்.(791) (1177)

 

10.  விளாம் பழத்தினை குழந்தைகள் தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

 

11.  வெந்நீரில் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.(737)

 

12.  வல்லாரை இலைகளைச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.     (743) (1177)

 

13.  வல்லாரைப் பொடி 150 கிராம், வசம்புப் பொடி 15 கிராம்    இரண்டையும் கலந்து அதிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.   (751)  (1912)

 

14.  வல்லாரைக் கசாயம் நினைவாற்றலைத் தூண்டும்.  (791)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

 

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக