மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 6 ஜூலை, 2021

நாக்கு - புண் (Glossitis)

 

01.  கடுக்காய்ப் பொடி, காசுக்கட்டிப் பொடி சம அளவு எடுத்து, ஒன்றாகக் கலந்து நாக்குப் புண்ணில் தடவி வந்தால், புண் குணமாகும்.

 

02.  கோடசாலை இலையைக் கசாயமாக்கி வாய் கொப்பளித்து வந்தால் நாக்குப் புண், வாய்ப் புண், உதட்டுப் புண்  ஆகியவை ஒரு வாரத்தில் குணமாகும்.(214)

 

03.  தேங்காயைத் துருவி, பால் எடுத்து, அந்தப் பாலை வாயில் சிறிது ஊற்றி, சற்று நேரம் வாய்க்குள்ளேயே வைத்திருந்து, கொப்பளித்து, பின்பு குடித்து வந்தால் நாக்குப் புண்கள் குணமாகும். (1461)

 

04.  நெல்லி முள்ளியை தூள் செய்து தேனில் உரைத்துத் தடவ, நாக்குப் புண் குணமாகும்.

 

05.  நெல்லி வேர்ப் பட்டையைப் பொடி செய்து தேனில் கலந்து தடவி வந்தால் நாக்குப் புண் குணமாகும்.  (1431)

 

06.  பப்பாளிப் பாலினை எடுத்து புண் மீது தடவி வந்தால், நாக்குப் புண், வாய்ப் புண் ஆகியவை குணமாகும்.(084) (1413) (1971)

 

07.  மணித் தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து வந்தால், கப நோயால் உண்டாகும் நாப்புண், வேக்காடு நீக்கும்.


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக