01. அம்மான் பச்சரிசி
இலைப் பொடியைப்
பாலில் கலந்து
சாப்பிட்டு வந்தால்,
தொண்டைப் புண்,
வாய்ப் புண்,
ஈறு வீக்கம்
ஆகியவை குணமாகும்.
(254)
02. இஞ்சியை வாயில் போட்டு மென்று உமிழ்நீரைத் துப்ப தொண்டைப் புண், குரல் கம்மல், இவைகள் குணப்படும்.
03. இலந்தைத் தளிரை
நீரில் போட்டுக்
கொதிக்க வைத்து
சிறிது உப்பு
சேர்த்து, அந்த
நீரைக் கொண்டு
வாய் கொப்பளித்து
வந்தால் தொண்டைப் புண்,
ஈறுகளில் இரத்தம்
வடிதல் ஆகியவை
சரியாகும். (250)
04. ஏலரிசி, சுக்கு, வால்மிளகு, திப்பிலி இவைகளை வறுத்து தூளாகி, ஒரு சிட்டிகை பால் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் சரியாகும்.(069)
05. கிராம்பைத் தணலில்
வதக்கி வாயில்
இட்டு, சுவைத்து
வந்தால் தொண்டைப் புண் ஆறும். (075)
06. சித்தரத்தைப் பொடியை
ஒரு கிராம்
அளவுக்கு எடுத்து,
சிறிது சர்க்கரை
சேர்த்து காலை
மாலை சாப்பிட்டு
வந்தால் தொண்டைப் புண்,
சுரம், சளி,
ஈளை, இருமல்,
நீர்க் கோவை,
வாயு ஆகியவை நீங்கும்.
(120)
07. சுக்கு, வால்
மிளகு, திப்பிலி,
ஏலக்காய் ஆகியவற்றை
வறுத்துத் தூளாக்கி,
ஒரு சிட்டிகை
பால் அல்லது
தேனில் சாப்பிட்டு
வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.069)
08. நாவல் பட்டையை நசுக்கி நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்
09. மாதுளம்பூவை உலர்த்தி, மாதுளம் பட்டையுடன் சேர்த்து கசாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் தீரும். (1539)
=======================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்
சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து
எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]
{01-07-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக