மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 6 ஜூலை, 2021

நாக்கு - சுவையின்மை (Tastelessness)

 

01.   ஆதொண்டை இலையை நெய்யில் வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், பசியின்மை, சுவையின்மை நீங்கும்.(271)

 

02.   கொத்துமல்லி இலை, சீரகம், பனங்கற்கண்டு சேர்த்துக் கசாயம் வைத்து அருந்தினால், சுவையின்மை விலகும்

 

03.   சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை இள வறுப்பாய் வறுத்து, உப்பு சேர்த்துச் சூரணித்து (பொடியாக்கி) உணவில் கலந்து சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியவை தீரும்.

 

04.   திப்பிலியை நெய்யில் வறுத்து, பொடித்து, கால் தேக்கரண்டி வீதம் தினமும் காலை மாலையில் தேனில் குழைத்து உட்கொண்டால், தொண்டைக்கட்டு, கோழை, சுவையின்மை பாதிப்பு அகலும்.

 

05.   பிரண்டைத் துண்டுகளை (முற்றியது) நார் நீக்கி, மோரில் உப்பு கலந்து ஊற வைத்து நன்கு உலர்த்தி எடுத்து வற்றலாக எடுத்து வைத்துக் கொண்டு எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் சுவையின்மை, பசியின்மை தீரும்.

 

06.   வேப்பம் பூவை [ நாட்பட்ட பழைய வேப்பம் பூவை ] நெய் விட்டு வதக்கி, உப்பு, சுட்ட பழம் புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலைக் கூட்டி, துவையல் செய்வது போலச் செய்து சோற்றுடன் கலந்துண்ண, பெருமூர்ச்சை, நாவறட்சி, சுவையின்மை, வாந்தி, நீடித்த வாத நோய், ஏப்பம், வயிற்றுப் புழு ஆகியவை போகும்.

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}


==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக