01. அதிமதுரப் பொடி
ஒன்று அல்லது
இரண்டு கிராம்
எடுத்து, தேனில்
குழைத்துச் சாப்பிட்டு
வந்தால் தொண்டைக் கரகரப்பு தீரும். (088)
02. பிரமிய வழுக்கை தாவரத்தை ஒரு பிடி எடுத்து வெண்ணெயில் பொரித்து தினசரி ஒரு வேளை வீதம் ஐந்து நாட்கள் சாப்பிட்டாலும் தொண்டை கரகரப்பு சரியாகும்.
03. பிரமிய வழுக்கை முழுத் தாவரத்தையும் சுத்தம் செய்து அரைத்து சாறு பிழிந்து நான்கு தேக்கரண்டி அளவுக்குக் குடித்தால் தொண்டை கரகரப்பு சரியாகும்.
04. பூவரசு மரத்தின் வேர்,
பட்டை ஆகியவற்றை
எடுத்து, நீர்
விட்டுக் கழாயம்
செய்து வாய்
கொப்பளித்து வந்தால்,
தொண்டைக் கரகரப்பு மற்றும் தொண்டை
சம்பந்தமான அனைத்துப்
பிரச்சனைகளும் தீரும். (068)
05. வல்லாரைச் சாற்றில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலியை சாப்பிட்டு வந்தால் மூளை சுறு சுறுப்பாக இயங்கும். (1624)
தொண்டைக் கர கரப்பு நீங்கும். (1640)
=======================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்
சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து
எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]
{01-07-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக