மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 1 ஜூலை, 2021

தொண்டை - கம்மல் ( Voice Dip)

 

01.  அரிவாள் மனைப் பூண்டின் வேர்ப் பொடியையை அரைத் தேக்கரண்டி    உரத்த குரலில் பாடுவதாலும் தொண்டையில் ஏற்படும் வறட்சி,   தொண்டைக் கம்மல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

 

02.  இஞ்சியை வாயில் போட்டு மென்று  உமிழ்நீரைத் துப்ப  தொண்டைப் புண்,  குரல் கம்மல், இவைகள் குணப்படும்.

 

03.  மாவிலையை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, அந்த நீரைப் பருகினால் குரல் கம்மல் மாறும்.  (086)

 

04.  மாந்தளிர்பொடி ஒரு கிராம் எடுத்து கசாயம் செய்து குடித்தால் குரல் கம்மல் தீரும்.  (1514)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]

{01-07-2021}

==========================================================

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக