01. கடுகு எண்ணெயில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால் பொடுகு நீங்கும்.
02. செம்பருத்தி இலைகளை கைப்பிடி அளவு எடுத்து, பத்து மருதாணி இலையும் தண்ணீரும் சேர்த்து மை போல அரைத்துக்
கொள்ளவும். மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி
அளவு எலுமிச்சம் பழச் சாற்றைச் சேர்த்து, தலையில் தடவி ஒரு மணி நேரம்
ஊறிய பிறகு குளித்து வர, பொடுகுத் தொல்லை நீங்கும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்க !
03. செம்பருத்தியின் காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்
04. தேங்காய் எண்ணெயில் சிறிதளவு வெந்தயப் பொடி, கற்பூரம் சேர்த்து ஊற வைத்து குளித்து வந்தாலும் பேன், பொடுகு மறையும்.
05. பாலில் ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன் தொல்லை, பொடுகுத் தொல்லை நீங்கும்,
06. பொடுதலை என்னும் படர் செடியை வேருடன் பிடுங்கி வந்து கழுவி சுத்தம் செய்து அரைத்துச் சாறெடுத்து, சமனளவு நல்லெண்ணை சேர்த்துக் காய்ச்சி வடித்து வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து முழுகி வந்தால், நாளடைவில் பொடுகு மறைந்து விடும்.(935)
07. பொடுதலைச் சமூலச் சாறும் நல்லெண்ணெயும் சம அளவு எடுத்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுகி வந்தால் தோல் நோய், பொடுகு ஆகியவை
தீரும். (1506)
=====================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள்
எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)19]
{04-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக