01. அரளிப் பூவைத் தலையில் வைத்துக் கொண்டால் பேன்கள் ஒழியும்.(1194)
02. இரவில் தலையணை மீது செம்பருத்தி இலைகளைப் பரப்பி, மெல்லிய துணி கொண்டு மூடி, அதன் மீது தலை வைத்துப் படுத்து உறங்கினால், பேன் தொல்லை ஒழியும்.(913)
03. சீத்தாப் பழ விதைகளைக் காய வைத்துப் பொடியாக்கி சீயக்காயில் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் பேனும் ஈரும் ஒழிந்து விடும். கூந்தலும் மிருதுவாகும்.(914))
04. சீரகம், மிளகு சம
பங்கு எடுத்து பால்விட்டு அரைத்து, தலைக்குத் தேய்த்து
அரை மணி நேரம் கழித்து குளித்து வாருங்கள். தலை அரிப்பு, பொடுகு, பேன் ஒழியும்.
05. செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக்
கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால்
தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.
06. செம்பருத்தி இலைகளைத் தலையணை மீது பர்ப்பி, மெல்லிய துணி கொண்டு மூடி, இரவில் அதன்மீது தலைவைத்து உறங்கி வந்தால், பேன்கள் அகலும். (913)
07. செம்பருத்தியின் காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில்
ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்
08. தேங்காய் எண்ணெயில் சிறிதளவு வெந்தயப் பொடி, கற்பூரம் சேர்த்து ஊற வைத்து குளித்து வந்தாலும் பேன், பொடுகு மறையும்.
09. .பாலில் ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன் தொல்லை, பொடுகுத் தொல்லை நீங்கும்,
10. மலை வேம்பு இலையை அரைத்துத் தலையில் பூசிக் காய்ந்த பின் குளித்து வந்தால், பேன்கள் ஒழியும்.(924) (1182) (1937)
11. வெந்தயத்தை பாலில் ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன் தொல்லை, பொடுகுத் தொல்லை நீங்கும்,
=====================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள்
எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)19]
{04-08-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக