மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

மூலம் - ஆசனக் கடுப்பு (Piles-Inflammation)

 

01.  துத்தி இலைகளை வேக வைத்து சாறு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து, பசும் பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மேகச் சூடு, ஆசனக் கடுப்பு ஆகியவை நீங்கும்.  (377)

 

02.  தொட்டாற் சுருங்கி  வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும்.

 

03.  நெய்யில் வறுத்து இடித்த மாம்பருப்புச் சூரணம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து கொடுத்தால் ஆசன எரிவு நீங்கும்.

 

04.  பிரண்டை உப்பை இரண்டு கிராம் அளவு வெண்ணெயில் கலந்து ஒரு மண்டலம் (48 நாள்) இரண்டு வேளை கொடுதது வர மூலம், ஆசனவாய் எரிச்சல் மற்றும் மூலக் கடுப்பு தீரும்.

 

05.  மாதுளம் பூக்கள் ஐந்தாறு எடுத்து நீரில் இட்டுக் காய்ச்சிக் குடி நீர் செய்து, கற்கண்டு சேர்த்து வேளைக்கு 60 மி.லி வீதம் தினமும் இருவேளைகள் சாப்பிட்டு வந்தால் மூலம், ஆசனக் கடுப்பு ஆகியவை தீரும்.

 

06.  மாதுளம் பழத் தோலை வறுத்துக் கருக்கிப் பொடியாக்கி, அதை விளக்கெண்னெயில் கலந்து ஆசன வாயில் தடவி வந்தால் ஆசன வாய் எரிச்சல் குணமாகும்.  (1673)

 

07.  மாம்பருப்புப் பொடி, நெய்யில் வறுத்தது  அரை  கிராம் எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால் இரத்தபேதி, ஆசன எரிவு தீரும். (1515

 

08.  வாழைப்பூ வெள்ளை, வெறி, உடல் கொதிப்பு, சீதபேதி, ஆசன வாய்க் கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல் ஆகியவற்றைத் தீர்க்கும். ஆண்மை தரும்.

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )20]

{05-08-2021}

==========================================================

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக