மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

மூலம் - ஆசனவாய்ப் புண் (Piles-Soreness at Anus)

 

01.   இளம் தென்னங்காய் மட்டையை இடித்துப் பிழிந்த சாற்றை 100 மி.லி. வீதம் நாள்தோறும் காலையில் குடித்து வந்தால் மூல ரணம் தீரும்.

 

02.   எழுத்தாணிப் பூண்டின் [ பத்து அல்லது பதினைந்து ] இலைகளைப் பறித்து விளக்கெண்ணை விட்டு வதக்கி அல்லது வதக்காமல் மோர் விட்டு அரைத்து நெல்லிகாய் அளவு உருட்டி தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் ஆசன வாயில் தோன்றிய புண்கள் ஆறும். அத்துடன் மலச் சிக்கலும் நீங்கும்.

 

03.   கானவாழையைச் சமைத்து உண்டால் காமம் பெருகும். அரைத்துக் கட்டினால் மூலத்தில் உண்டாகும் குழிப் புண்கள் மாறும்..

 

04.   தொட்டாற் சுருங்கி இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும்.

 

05.   மஞ்சள் பொடி கலந்த சுடுநீர்த் தொட்டியில்  ஆசன வாய் படும்படி அரைமணி நேரம் அமர்ந்து இருந்தால் மூலப் புண் ஆறும். மூலவலி குறையும்.  (394) (2018)

 

06.   மாசிக்கயை நீரில் இழைத்துத் தடவி வர ஆசனவாயில் உள்ள வெடிப்பு, மூலப்புண் தீரும்.

 

07.   மாதுளம் பழத் தோலை நீரில் ஊற வைத்து அந்த நீரை மலம் கழித்த பின் ஆசன வாயைக் கழுவப் பயன்படுத்தி வந்தால்  மூலப் புண் குணமாகும்.  (376)

 

08.   வெந்நீர்த் தொட்டியில்  மஞ்சள் பொடி கலந்து, அதில் குந்தி அமர்ந்து ஆசன வாய் படும்படி 15 நிமிடங்கள் இருந்தால் மூலப் புண்கள் ஆறும்; மூல வலி குறையும்.  (394)

 =====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )20]

{05-08-2021}

==========================================================

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக