01. இலவங்கப் பொடியை நீரில் இட்டு அரை மணி நேரம் ஊற வைத்து வடிகட்டிப் பருகி வந்தால் கர்ப்பகால வாந்தி (மசக்கை வாந்தி) நிற்கும்.(282)
02. கர்ப்பக் காலத்தில் ஏற்படும் Hyper
emesis gravidarum என்று
சொல்லக் கூடிய மசக்கைக்கு மாதுளைச் சாற்றுடன் கற்கண்டு சேர்த்துப் பாகு காய்ச்சி, அதில் பன்னீர்
கலந்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் தினசரி இரு வேளைகள் பருகி வந்தால், மசக்கையினால்
ஏற்படும் வாந்தி வராமல் தவிர்க்கலாம்
03. புதினாக் கீரைத் துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் மசக்கை வாந்தி சரியாகும்.(289) (2012)
04. மந்தாரை இலைகளை உலர்த்திப் பொடி செய்து, 2 சிட்டிகை எடுத்து சிறிது தேன் ஊற்றிக் குழைத்து அருந்தினால் மசக்கை நீங்கி பசி உண்டாகும்.
(1455)
05. மாதுளம் பழச் சாறு அருந்தி வந்தால் கர்ப்ப காலத்தில் ஏற்படும்
வாந்தியை நிறுத்தும்.
====================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01).அடைப்புக்
குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ
அதிகாரி, டாக்டர். வெ .ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப்
பெற்றவை !
(03).அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]
{01-09-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக