01. துளசி இலையும் மிளகும் சம அளவாக சேர்த்து நன்கு அரைத்து சுண்டைக் காய் அளவு எடுத்து வாயில் போட்டு நீர் அருந்த வேண்டும். காலையில் நாள்தோறும் இவ்வாறு செய்து வந்தால் வாந்தி பேதி (காலரா) அணுகவே அணுகாது. (ஆதாரம்; “நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல் பக்கம் 174
& 175)
02. புதிய மண்சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்த மிளகாய் இரண்டைப் போட்டு, கறுக்க வறுத்து, மிளகாயை எடுத்து விட்டு, அந்தச் சட்டியில் மூன்று தம்ளர் தண்ணிர் விட்டுக் கொதிக்க வைத்து அவ்வப்போது பருகி வந்தால், வாந்தி பேதி உடனே நிற்கும்.(100)
03.
பேய்மிரட்டி
இலையைக்
கஷாயமிட்டுக் கொடுக்க வாந்தி பேதி, குளிர்சுரம், கோரசுரம், முறைக்காய்ச்சல், இருமல்
ஆகியவைக் குணப்படும்.
04.
மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2
கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1
மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் கொடுத்து வர
வாந்தி பேதி நிற்கும்.
====================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01).அடைப்புக்
குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ
அதிகாரி, டாக்டர். வெ .ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப்
பெற்றவை !
(03).அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]
{01-09-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக