மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 2 செப்டம்பர், 2021

விக்கல் (Hiccough)

 

 

01.     எட்டுத் திப்பிலி அரிசியுடன் பத்து சீரகம் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் விடாத விக்கலும் கூட விலகும்.

 

02.  கடுகைப் பொடித்து, வெந்நீரில் கலந்து பருகி வந்தால், வயிற்று வலி, விக்கல் ஆகியவை நீங்கும்.

 

03.  கடுக்காய்த் தோலை மைய இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு, விக்கல் வரும் போது கால் தேக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் தீரும்.(260)

 

04.  நாய்த் துளசி இலைச் சாற்றில் 30 துளி எடுத்து, தாய்ப் பாலுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் விக்கல் தீரும். மாந்தக் கழிச்சல், இருமல், சளி ஆகியவையும் தீரும்.(123)

 

05.  நெல்லிகாயை இடித்துச் சாறு பிழிந்து, தேன் கலந்து  சாப்பிட்டால் விக்கல் குணமாகும்.(1135)

 

06.  மஞ்சள் ஒரு துண்டை எடுத்து நல்ல விளக்கில் சுட்டுக் கரியாக்கி தேனில் குழைத்து உள்ளுக்குச் சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.  (255)

 

07.  முற்றிய மாவிலையைப் பொடியாக்கித் தணலில் போட்டு சுவாசித்தால் விக்கல் தீரும்.(253) (1305)

 

08.  விரலி மஞ்சள் துண்டினைச் சுட்டுக் கரியாக்கித் தேனில் குழைத்து உண்டால் விக்கல் தீரும்.(255)

===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)17]

{02-09-2021}

==========================================================================

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக