01. உத்தாமணிச் சாறுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து தடவி வந்தால் கை, கால் வீக்கங்கள் சரியாகும்.(573)
02. கண்டங்கத்தரி இலையைத் தண்ணீர் விட்டு அரைத்துக் கை, கால்களில் பற்றுப் போட்டால் நாளடைவில் வீக்கம் மறைந்துவிடும்.(581)
03. கண்டங்கத்தரி விதையை நீரில் அரைத்துப் பற்றுப் போட்டு வந்தால் கை, கால் வீக்கத்தைப் போக்கும்.
04. வேலிப் பருத்திச் சாறுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து கை கால்களில் பூசி வந்தால் கை கால் வீக்கம் இருப்பின் நாளடைவில் வீக்கம் நீங்கிவிடும்.(573)
===================================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர் .வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில்,
S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
===============================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)20]
{05-09-2021}
==========================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக