01. எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் குன்றிமணி இலைச் சாற்றைக் கலந்து வலியுள்ள
வீக்கங்களுக்குப் பூசிவர வீக்கம் நீங்கும்
02. ஓமத்தை நீர் விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப் போட்டால் சதை / தசை வீக்கம் குணமாகும்.
(305)
03. சுக்கை அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் பற்றுப் போட்டு வந்தால், வீக்கம் குணமாகும்.
04.
தாருணிச்
செடியை அரைத்துப் பற்றுப் போட்டு வந்தால் கல் போன்ற வீக்கம் குணமாகும். (1814)
05.
தேள்கொடுக்குச் செடியின் இலையானது
வலி நிவாரணியாகவும், வீக்கத்தை குறைக்க
கூடியதாகவும் இருக்கிறது.
06.
நொச்சி
இலைச் சாற்றினை மூட்டு வலி, சதை வீக்கம், நரம்பு பிசகு ஆகியவற்றுக்குப் பூசி வரலாம்.
(303) (1770) (2014)
07. புங்க இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கத்தின் மீது
வைத்துக் கட்டினால், வீக்கம் கரைந்து குணமாகும்.
(574)
08.
பூவரசு இலைகளை அரைத்து வதக்கிக் கட்டினால் சதை / தசை வீக்கம் குணமாகும்.
(1021)
09. மாவிலங்க இலையை குடிநீரிட்டுக் கொடுக்க, சுரம், செரியாமை போகும். இலையை அரைத்துப்
பற்றுப் போட்டால் வீக்கம் கரையும்
10. மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம் புல் ஒரு பிடி, கீழாநெல்லி ஒரு பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீரேற்றம், சோகை, வீக்கம், நீர்க்கட்டு, மகோதரம் தீரும்.
11.
விராலிப் பட்டையை அரைத்துப் பற்றிட வீக்கங்கள் விரைவில் கரையும்.
===================================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர் .வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில்,
S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
===============================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)20]
{05-09-2021}
==========================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக