மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 செப்டம்பர், 2021

வாந்தி - இரத்த வாந்தி (Melanosis)

 

01.   அதிமதுரப் பொடியுடன் சந்தனத் தூள் சமமாகக் கலந்து ஒருகிராம் அளவுக்கு எடுத்துப் பாலில்கலந்து கொடுத்து வந்தால் இரத்த வாந்தி நிற்கும்.(560)

 

02.   ஆடாதொடை இலைச் சாறும், தேனும் சம அளவு கலந்து, சிறிது சர்க்கரை சேர்த்து, தினசரி 4 வேளைகள் கொடுத்து வந்தால் இருமல், மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு, இரத்த வாந்தி ஆகியவை நீங்கும். குழந்தைகளுக்கு ஒரு வேளைக்கு 5 துளிகள், சிறுவர்களுக்கு 10 துளிகள், பெரியவர்களுக்கு 15 துளிகள் கொடுக்கலாம்

 

03.   துத்திப்பூவை நன்கு உலரவைத்து சூரணம் செய்து தேவையான அளவு பாலும் கற்கண்டும் சேர்த்து அருந்தி வந்தால் ரத்த வாந்தி நின்று உடல் குளிர்ச்சியாகும். ஆண்மையையும் இது பெருக்கும்.

 

04.   தென்னம் பூவை வாயில் இட்டு மென்றுதின்று வந்தால் இரத்த வாந்தி குணமாகும். உட்சுரம் தீரும்.(1409)

 

05.   பரங்கி விதையை உலர்த்திப் பொடி செய்து, சீரகம், வெல்லம் சேர்த்து உண்டு வந்தால் இரத்த வாந்தி நிற்கும்.  (1472)

 

06.   வெங்காயத்தை உப்பில் தொட்டு தின்று வந்தால் இரத்த வாந்தி நிற்கும்.  (292) (1281) வயிற்று வலி நிற்கும்.  (1587)

 ====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01).அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்   ஸ்ரீ சேஷா சாய்  ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரி,  டாக்டர்.  வெ .ஹரிஷ்   அன்புச் செல்வன்  M.D(s),  அவர்கள்   2017 –ஆம்  ஆண்டு    தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]

{01-09-2021}

==========================================================

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக